சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி நிறுவனத்தில் பயின்று இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை முழுமையாக முடிக்காதவர்களுக்கான சிறப்புத் திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2014-15-ஆம் கல்வி யாண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் சேர்ந்த முதுநிலை மாணவர் களும், 2013-14-ஆம் ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பு களில் சேர்ந்து அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறாதவர் களுக்கு மீண்டும் தேர்வெழுத 2019 டிசம்பர் மற்றும் 2020 மே என இரண்டு முறை, முறைப்படுத்தப்பட்ட கட்டணத்துடன் வாய்ப்புகள் அளிக்கப்படும்.
மேலும் பட்டப் படிப்பு காலத்தை பூர்த்தி செய்து, குறிப் பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அல்லது படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களுடைய படிப்புகளை பட்டப் படிப்பிலிருந்து பட்டயப் படிப்பு அல் லது சான்றிதழ் படிப்பாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.ideunom.ac.in அல் லது www.unom.ac.in இணைதளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
thank You admin
ReplyDeleteHi
ReplyDelete