‘அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2019

‘அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!


அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெயர்ப்பலகையில், இது ‘அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன் வெளியிட்ட அறி விப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பெயர்ப் பலகையில் பள்ளியின் தனிப் பட்ட பெயரை மட்டும் குறிப்பிடுவ தால் பொதுமக்கள் அதை தனி யார் பள்ளி என நினைத்துக் கொள்கின்றனர் என்று பள்ளிக் கல்வி மதிப்பீட்டுக்குழு இயக்கு நரகத்துக்கு கருத்துரு வழங்கி உள்ளது. அதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் இனி தங் கள் பள்ளியின் பெயர்ப்பலகை யில் ‘அரசு உதவி பள்ளி’ என தமிழிலும், ஆங்கிலத்தில் ‘Government aided school’ எனவும் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது பள்ளி யின் பெயர்ப்பலகையில் ‘அரசு உதவி பள்ளி’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளதா என்பதை கண் காணிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி