கல்வித்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்ய இணை இயக்குனர் நாகராஜ முருகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக கல்வித்துறையில் அனைத்து ஊழியர்களும் உத்வேகத்துடன் பணியாற்றவும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படும் விதத்தில், ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முதல் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வரை அனைவரையும் பாரபட்சமின்றி இடமாறுதல் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்காக ஜூலை 3ம் தேதி மாவட்ட அளவில் கவுன்சிலிங் நடத்தி இடமாறுதல் செய்யப்பட வேண்டும்.
ஊழியர்களுக்கு பாதிப்புன்றி, புகார்களுக்கு இடமளிக்காமல் நடத்த வேண்டும், பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, கவுன்சிலிங்கிற்குப்பின்காலியாக உள்ள பணியிடங்கள் விபரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி