அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்குவது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்ட் 413 வட்டாரக் கல்வி அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்மார்ட் கார்ட் பெற்றப்பட்ட 24 மணி நேரத்தில் தலைமை ஆசிரியரை அழைத்து நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு பெற்றுக்கொண்டதற்கான விவரங்களை இணப்பில் உள்ள படிவத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளிக்க வேண்டும். அதனை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் நேரில் வழங்கிட வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் தலைமை ஆசிரியர்களிடம் பெற்ற ஒப்புதல் கடிதங்களை தொகுத்து அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் தம் ஆளுகையின் கீழ் வரும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் மற்றும் அறிக்கைகளை தொகுத்து வருவாய் மாவட்ட அளவிலான அறிக்கையாக இணை இயக்குநரிடம்(தொழிற்கல்வி) நேரில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிகல்வித்துறை அனுப்பிய அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி