அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு துவக்கப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் காயத்ரி மற்றும் கனிஷ்கா ஆகிய மாணவிகள் காயமடைந்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த காயத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளியின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி