TET தேர்வு எழுதியவருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2019

TET தேர்வு எழுதியவருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!


‘வந்தேமாதரம்’ பாடல் கேள்விக்கு விடை எழுதிய வழக்கு: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண்

தஞ்சாவூரைச் சேர்ந்த கிளான் தினேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் பி.எட். முடித்து உள்ளேன். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி,ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-ம் தாள் தேர்வு எழுதினேன்.அதில் நான் 81 மதிப்பெண் பெற்றேன்.

மேலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். அப்போது தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையின்படி 82 மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பேன். ஒரு மதிப்பெண் குறைவாக பெற்றதால் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளேன்.

மேலும் அதில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு, வங்க மொழியில் எழுதப்பட்டது என்பது தான் சரியான பதில். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய விடைத்தாளில் சமஸ்கிருதம் என்ற பதில் எழுதியவர்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. இது தவறு. அந்த ஒரு மதிப்பெண்ணால் நான் தேர்ச்சி பெறாமல் உள்ளேன். என்னை போல சரியான விடை எழுதிய பலர், ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே அந்த கேள்விக்கு சரியான பதில் எழுதிய எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும், ஆசிரியர் தகுதித்தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்புவிசாரணைக்கு வந்தது. முடிவில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிபதிஉத்தரவிட்டார்.

மேலும் இந்த மதிப்பெண்ணை கொண்டு மனுதாரர் வேலை வாய்ப்பு கோர முடியாது. தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றதாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

16 comments:

  1. விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி....

    ReplyDelete
  2. Certificate validitiy mutunchathum Yethukku one mark

    ReplyDelete
  3. Appo andha oru mark vanginavangalukku minus aakuma...athan mollama job vanginavanga nilama..

    ReplyDelete
  4. Oru Mark potta mattum job kedauchuruma ethuku intha court ethuku intha case ethuku than da intha exam

    ReplyDelete
  5. Sir , I want to surrender my original certificate & TET passed 2013 certificate to TN government . Already surrender passed 2013 certificate to Principle secretary . They resend to me original certificate . Anybody Knows the Procedure of surrender educational certificate Please inform . Very Urgent -

    ReplyDelete
  6. இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி....

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. What will be action against them who joined with the wrong answer. I lost by weightage 0.32. by this judgement i will get 0.4 which means i will get my posting. We should do anything on this. Post your comments.

    ReplyDelete
  10. Sir I want advacate cell number for file a case

    ReplyDelete
  11. Sir please any one can give the advocate cell number or w.p. number to file a case in chennai High court.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி