பிளஸ் 2 துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதிமுதல் வழங்கப்படும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2019

பிளஸ் 2 துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 21-ம் தேதிமுதல் வழங்கப்படும்


அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர் வெழுதியவர்கள் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு உட்பட) தங்கள் அசல் மதிப்பெண் சான்றி தழ்களை ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

பழைய நடைமுறை யில் (1,200 மதிப்பெண்கள்) தேர் வெழுதியவர்களுக்கும் ஒருங்கி ணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். புதிய நடைமுறையின்படி தேர் வெழுதி அனைத்துப் பாடங்களி லும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான மதிப்பெண் சான் றிதழ்கள் தனித்தனியே வழங்கப் படும். 11, 12-ம் வகுப்புகளில் முழுமையாக தேர்ச்சியடையாத வர்களுக்கு அவர்கள் 2 தேர்வு களிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட மதிப்பெண் பட்டியலாக வழங்கப் படும். இந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி