தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2019

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு


குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2019 அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து குறிப்பிட்டகாலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள், இறுதி வாய்ப்பாக வரும் அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் பருவங்களில் தேர்வெழுதும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு விண்ணப்பிக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ரூ. 150 அபராதத் தொகையுடன் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது வாய்ப்பிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ரூ. 750 அபராதத் தொகையுடன் விண்ணப்பிக்க செப்டம்பர் 24 கடைசி நாளாகும்.மேலும் விவரங்களுக்கு www.tndte.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி