யு.ஜி.சி., எச்சரிக்கை:உரியகல்வித்தகுதி இல்லாதவர்களை பேராசிரியர்களாக நியமிக்க கூடாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2019

யு.ஜி.சி., எச்சரிக்கை:உரியகல்வித்தகுதி இல்லாதவர்களை பேராசிரியர்களாக நியமிக்க கூடாது


உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் பேராசிரியர்களாக நியமனம்செய்யக்கூடாது' என்று, பல்கலைமானிய குழுவான,யு.ஜி.சி., கட்டுப்பாடு விதித்துள்ளது.

யு.ஜி.சி., சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:உயர்கல்வி நிறுவனங்களில், அனைத்து மாணவர்களுக்கும், தரமான கல்வியை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், பல பல்கலைகளில் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள்உள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, யு.ஜி.சி., குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெறாதவர்களை, பல கல்வி நிறுவனங்கள் பேராசிரியர் பணியில் சேர்த்துள்ளதாகவும், குறைந்த ஊதியம் காரணமாக, இந்த நியமனங்களை மேற்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.எனவே, யு.ஜி.சி.,யின் விதிகளை, உயர்கல்வி நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி