வல்லுநர் குழு அறிக்கையினை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

வல்லுநர் குழு அறிக்கையினை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருமா?


ஓய்வூதியம் பற்றி அறிக்கை சமர்ப்பித்து 10 மாதமாகியும் வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை இல்லை

பரிதவிப்பில் அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை அளித்து 10  மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாததால், அரசு ஊழியர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை விதிமுறைப்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்  மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால் ஓய்வுபெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப் பலன்கள் கிடைக்கவில்லை.

4 comments:

  1. நிச்சயம் நமது அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. அடுத்த 40(2059) வருடத்துக்கு பிறகு அத்திவரதர் காட்சியளிக்கும் போது அது நடைமுறைக்கு வரும் என நம்புவோம்.....

    ReplyDelete
  3. அப்போது கூட வழக்கு தான் நடக்கும்..

    ReplyDelete
  4. பழைய ஓய்வூதியத்திட்டம் மட்டுமே சிறந்தது...இது அனைவருக்கும் தெரியும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி