பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எப்) உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
10 மீ ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீனியர் பிரிவில் ஏற்கெனவே அபூர்வி சண்டிலா, அஞ்சலி பகவத் ஆகியோர் மட்டுமே தங்கம் வென்றிருந்த நிலையில் 3-வது வீராங்கனையாக இளவேனில் உயர்ந்துள்ளார்.
தமிழகத்தில் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இளவேனில் தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார்.
தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இளவேனில் தங்கம் வென்ற நிலையில் சீனியர் பிரிவில் முதல் முறையாக இந்த ஆண்டு அறிமுகமாக தங்கம் வென்றார். இதுமட்டுமல்லாமல் உலக பல்கலைக்கழகங்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் இளவேனில் இந்த ஆண்டு வெள்ளி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி