பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, வரும், 11ம் தேதிக்குள் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2019

பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, வரும், 11ம் தேதிக்குள் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவு!!

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளுக்கும், அரசு தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் வகையில், அவர்களின் விபரங்களை, பள்ளிகள் சேகரித்து, 11ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்ப வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த விபரங்களை சரிபார்த்து, அரசு தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, 13ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டில், பிளஸ் 1 படித்த அனைத்து மாணவர்களின் விபரங்களும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில், இடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடுபடக் கூடாது. அவர்கள் வேறு பள்ளிக்கு மாறியிருந்தாலும், அவர்களின் விபரங்களை, புதிய பள்ளிகளில், இணைத்து வழங்க வேண்டும் என, அரசு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி