5, 8ம் வகுப்புக்கு, 'ரேங்கிங்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2019

5, 8ம் வகுப்புக்கு, 'ரேங்கிங்'


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை வந்தால், அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, சில தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, 'ரேங்கிங் முறையை அமல்படுத்தக் கூடாது' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

'மத்திய அரசின் பரிந்துரைப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும், கே.வி., பள்ளிகள் இன்னும் முடிவு செய்ய வில்லை. ஆனால், அனைத்து நிர்வாக பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக, தமிழக பள்ளி கல்வித்துறை, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டே பொதுத்தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. அதற்கேற்ப மாணவர்களை தயார் செய்யும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பொதுத்தேர்வு நடத்தப்படும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில, மாவட்ட அளவில், ரேங்கிங் முறையை அமல்படுத்த, தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.பொதுத்தேர்வில் முன்னிலை பெறும் மாணவர்களின் விபரங்களை வெளியிட்டு, அதன் வாயிலாக, தங்கள் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் நன்கொடையை உயர்த்தி கொள்ள, சில பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இந்த ஆலோசனைகளுக்கு, முதலிலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'ரேங்கிங்' முறை இல்லை என, பள்ளி கல்வித் துறை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி