5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து மூன்றாண்டுகளுக்கு விலக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2019

5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து மூன்றாண்டுகளுக்கு விலக்கு


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இதற்கு தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது '' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் ஈ.வெ.ராமசாமி நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின் அவர் கூறியதாவது:காலாண்டு தேர்வுக்குப்பின் பள்ளி விடுமுறை இல்லை எனக்கூறி வருகின்றனர். அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல காலாண்டு விடுமுறை உண்டு. இதுபோன்ற பல வதந்திகளை பரப்பி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது.அதேநேரம் காந்தியடிகளின் பிறந்தநாளை பள்ளி கல்வித்துறை வாயிலாக சிறப்பாக கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இவ்விழாவுக்காகவும் காலாண்டு அட்டைவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இது தேசிய அளவில் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் இதற்கு மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த கால கட்டத்தில் மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே அடுத்த மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலை தொடரும்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவு முதல்வரால் எடுக்கப்படும். இதுபற்றி கூற இயலாது.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி