ஆசிரியர் தின கவிதை ( ஆசிரியர் திரு.சுரேஷ் ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2023

ஆசிரியர் தின கவிதை ( ஆசிரியர் திரு.சுரேஷ் )


அன்பார்ந்த ஆசானுக்காய் அழியாதிருக்க சில வரிகளோடு
இன்று வரையில்,
இதமாய் வீசிவந்த
தென்றலும் புயலாய்!
இனிமையாய் ஒலித்த சங்கீதமும்
இன்னலாய்!
இயற்கையின் சீற்றமதில்
தூசிபோல் எறியப்பட்டுவிட்டோம்!..

கலையிழந்த வாழ்வில்
கற்பனைகள் காணச் சொன்னீர்,
கோட்டைகள் பல கட்டிவிட்டோம்
காலமதை நிஜமாக்குமென!..

பிரிவுக்கோ - பிரியாவிடையிலே
புது அர்த்தம் சொன்னீர்...
'கருவறையிலிருந்து உலகை
காணும் குழந்தை...' என்றே!..

சிலை வார்த்து நீங்கள்
சித்தரித்த கதை கூறினாலும்
சிரித்துக்கொண்டே
சிலையும் கதை கேட்கும்!..
உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும்
அத்தனை அர்த்தங்கள் கண்டோம்;
என்றும் நம்முள் அவை
அழியாத சித்திரமாய்!..

கண்களே கனத்துவிட்டது,
கண்ணீரின் பாரம் தாங்காமலே...
கண்களென நாம் போற்றும் - உங்களை
காலம் பிரிக்கப் போவதையெண்ணி!..

பார் உள்ள நாள்வரை
படிந்திருக்கும் - நம் நெஞ்சமதில்
பாசமாய் - நீர் சொன்ன
பாடங்கள் அனைத்தும்!..

தவமின்றி இறைவன்
தந்த வரமென்று - உங்களை
தடையின்றி கருதுகிறோம் - இன்று
தீ மேல் நின்றேனும்
தவம் செய்யத் தயார் - உங்கள்
தடையில்லா அன்பை - வரமெனத்
தருவீரேயானால்!..

அழுது தீர்த்த பின்பும்
தீராத சில சோகங்களுண்டு,
நம்முள் எழுதி முடித்த பின்பும்
ஆறாத பல காயங்கள் மீதி!..

தயவாய் வேண்டிக்கொள்கிறோம்;
கல்லூரி வாழ்வு முற்றுப் பெற்றாலும்
நம்மோடான உறவுக்கு
முற்றுப் புள்ளி வைத்திட வேண்டாமென்றே!..

விடைகளின்றி விழி - நீர் சிந்துகின்றது
அனாதையாகிவிட்ட உறவின் துகல்களோடு...
'நம்'
அன்பார்ந்த ஆசானுக்காய்
அழியாதிருக்க சில வரிகளோடு...
புயல்களும் தென்றலாகி,
பூகம்பங்களும் பூக்களாகி,
சோதனைகள் கடந்து சாதனைகள்
உங்களோடு சங்கமமாகட்டும்!
காற்றுள்ளவரை - அதன் பணி
உங்கள் புகழ் பரப்புவதாகட்டும்!

ஆக்கம் :

Mr. B. SURESH M.Sc., (Chem) M.Ed., PGDHE
PG Assistant in Chemistry
email: resh986@gmail.com
Ph: 7339317695

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி