நல்லாசிரியர் விருது தொகையை புரவலர் திட்டத்திற்கு அளித்த நல்லாசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2019

நல்லாசிரியர் விருது தொகையை புரவலர் திட்டத்திற்கு அளித்த நல்லாசிரியர்


2018 - 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை என் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சி. செ.முத்துலட்சுமி அவர்கள் ஆசிரியர் தினத்தன்று பெற்றார்.

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில்"எனக்கு இந்த விருது கிடைப்பதற்கு முழுமுதற் காரணம் நான் பணியாற்றும் இந்த பள்ளியும் என்னுடன் பணிபுரியும் ஆசிரிய பெருமக்களும் எங்கள் பள்ளியின் அன்பு குழந்தைச் செல்வங்களும் காரணம்" என்று உவகை பொங்க கூறினார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இந்த விருது தொகை ரூ_10000 பள்ளியின் முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் புரவலர் திட்டத்திற்கு ரூபாய் 10000 இன்முகத்தோடு அளித்துள்ளார்.

தான் பெற்ற விருதும் பள்ளிக்கு பெருமை சேர்த்த என் பள்ளியின் தலைமையாசிரியர் தான் பெற்ற விருது தொகையை எம் பள்ளிக்கு அளித்து தான் ஒரு சிறந்த நல்லாசிரியர் என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

அவருக்கு பள்ளி குழந்தைகளின் சார்பாகவும்பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் பள்ளி மேலாண்மை குழு சார்பாகவும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி