ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம் 


ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.30-ம் தேதி கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள் ளது.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வுஎன இரு தேர்வுகளை உள்ளடக்கியது. மெயின் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் இரு தடவை (ஜனவரி, ஏப்ரல்) நடத்துகிறது.இந்நிலையில், 2020-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் கான முதலாவது ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி 6 முதல் 11 வரை நடைபெற உள் ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றுதொடங்கியது. ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுத விரும் பும் மாணவர்கள் http://nta.ac.in என்ற இணையதளம் வழி யாக ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப் பங்களை சமர்ப்பிக்க செப்.30 கடைசி நாள் ஆகும்.

தேர்வுக் கான ஹால்டிக்கெட் டிசம்பர் 6-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏஅறிவித்துள்ளது. தொடர்ந்து 2-வது மெயின் தேர்வு ஏப்ரல் 3 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி