ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2019

ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.


மாணவர் சேர்க்கை குறைவால், அரசு தொடக்க பள்ளிகளில், ஓராசிரியர் பள்ளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேரவே விரும்புகின்றனர். பெற்றோரும், தங்கள் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என, விரும்புகின்றனர். அதனால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அரசு பள்ளிகளை, படிப்படியாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுடன், தொடக்க பள்ளிகளையும் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளையும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் வழியாக, அரசு பள்ளிகளில் தக்க வைக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களை இடம் மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, ஆக., 28, 30ம் தேதிகளில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசு தொடக்க பள்ளிகளின் ஆசிரியர்கள் பலர், வேறு பள்ளிகளுக்கு மாற்றப் பட்டதால், இரண்டு ஆசிரியர்கள் இருந்த பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ஒரு ஆசிரியர் மட்டுமே, அவர்களுக்கு பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி