School Morning Prayer Activities - 03.09.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2019

School Morning Prayer Activities - 03.09.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.09.19
திருக்குறள்

அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:272

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

விளக்கம்:

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

பழமொழி

All things come to those who wait

 பொறுத்தார் பூமி ஆள்வார்.

இரண்டொழுக்க பண்புகள்

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி

இறைவன் தனக்கான அடையாளங்களை இயற்கையிடம் அற்பனித்தான்.
மனிதர்களாகிய நாம்  இயற்கையை காப்போமாக...

----- வலம்புரி ஜான்

பொது அறிவு

1.பொருளாதாரத்தின் தந்தை எ‌ன்று‌ அழைக்கப் படுபவர் யார்?

ஆடம் ஸ்மித்

2. உலகின் மிகச் சிறிய கடற்கரை எந்த நாட்டில் உள்ளது?

மொனோகோ நாடு.
4.1 கி. மீ மட்டுமே உள்ளது

English words & meanings

Ginger - a spice as well as medicine
இஞ்சி. ஒரு நறுமணப் பொருள் மற்றும் மருத்துவ பொருள் ஆகும்.
தரை கீழ் தண்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டு

Grazing - a method of feeding herbivores animals
மேய்ச்சல், மேய்தல்

ஆரோக்ய வாழ்வு

வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது .

Some important  abbreviations for students

FYI - For Your Information

DIY - Do It Yourself

நீதிக்கதை

நரியின் தந்திரம்

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது.

சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது.

நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது.

நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

03.09.2019

☘ப சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டு தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க நிலவிறக்கத்திற்கு  தயார் நிலையில் உள்ளது.

☘மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினி பூர் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்ட பாபன் மோகன்டா எனும் வன அதிகாரி அனைத்து நெகிழி குப்பிகளையும் தன் அலுவலக பூந்தொட்டிகளாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளார்.




☘தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

☘ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த விஹாரி தனது தந்தைக்கு இதனை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

☘2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்திய அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Today's Headlines

🌸In Chandrayaan-2 the lander 'VIKRAM' got separated and Chandrayaan-2 is ready for the historical landing on moon.

🌸A forest officer named Papon Mohanta who was appointed in West Medinipur District in Calcutta miraculously converted all plastic bottles into beautiful flower pot to decorate his office and astonished everyone.

🌸 To night there is a chance of rain in both Tamil Nadu and Pudhuchery says Chennai metrology.

🌸Hanuma Vihari who recorded his first century against West Indies said that century is dedicated to his father - a heart touching statement.

🌸 In second test there is a great chance for India to win the match as it set it's target of 468 runs  against West Indies.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி