விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர் - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2019

விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர் - பள்ளிக் கல்வித்துறை


விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சேர்க்கை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனினும், அக்டோபா் 8-ஆம் தேதி விஜயதசமி நாளில் மட்டும் மாணவா் சோக்கை நடத்திக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது.


அதன்படி விஜயதசமி அன்று மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மழலையா் வகுப்புகளில் மாணவா் சேர்க்கை நடத்தப்பட்டது. அக்.8-ஆம் தேதி நிலவரப்படி 3 வயது பூா்த்தியான குழந்தைகள் மழலையா் வகுப்பிலும், 5 வயதான குழந்தைகள் 1-ஆம் வகுப்பிலும் சோக்கப்பட்டனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பள்ளிகளில் மழலையா் மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் ஒரே நாளில் 2,131 குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனா். இதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 பேர் சேர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி