வேலூர் மாவட்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஆழ்துளை கிணறு விவரம் இன்று 3.00 மணிக்குள் Online - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு ( Entry And submit Form Added) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2019

வேலூர் மாவட்ட அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - ஆழ்துளை கிணறு விவரம் இன்று 3.00 மணிக்குள் Online - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு ( Entry And submit Form Added)


அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு சார்பான விவரத்தை இணைப்பிணை Click செய்து  கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்  இணைப்பில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் வட்டாரக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் விவரங்களை ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்த பின் அனைத்து படிவங்களை பெற்று தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் விரங்களை ஆன் லைனில் உள்ளீடு செய்துவிட்டு , படிவத்தை பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ / நர்சரி பிரைமரி, தொடக்க /நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் மூடப்படாத நிலையில் ஆழ்துளை கிணறு இருப்பின் விவரத்தை சார்ந்த BDO அலுவலகத்திற்கு விவரத்தை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூடப்பாடத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு இருப்பின் விவரத்தை உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWN LOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி