நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

நெட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் 


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

இந்த தேர்வை தற்போது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு டிசம்பர் 2-ல் தொடங்கி 6-ம் தேதி வரையும், ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக் கான நெட்தேர்வு டிசம்பர் 15-ம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் சுமார் 11.5 லட்சம் பேர் வரை விண்ணப்பித் துள்ளனர். பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் மாணவர்கள் கடந்த அக்டோபர் 18-ம் தேதி முதல் இணையதளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ள என்டிஏ ஏற்பாடு செய்திருந்தது.

திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (அக்.25) முடிவடைகிறது. மாணவர்கள் http://nta.ac.in என்ற இணைய தளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி