கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2019

கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான பதிவு


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், கடந்த 25 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தவறி விழுந்தான்.

இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர் விஜயபாஸ்கர் சுஜித்தின் உயிரிழந்தது குறித்து மிகவும் உருக்கமாக கூறியிருப்பதாவது:- “  மனதை தேற்றி கொள்கிறேன்; ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்!  கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை இருட்டாய் மாறுமென எண்ணவில்லை .  85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது!

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய்  என்று எண்ணவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அமைச்சர் அவர்களே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ௮மைச்சர் ௭ன்பதை தாண்டி தந்தை ௭ன்று நி௹பித்தீர்௧ள். ஆனால் ௮ந்த குழந்தையை காப்பாற்ற முடியவில்லை ௭ன்ற வ௫த்தம் மக்கள் ௮னைவ௫க்குமே ௨ண்டு.இ௫ப்பினும் ௨ங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி