வட்டார கல்வி அலுவலர் ஊதிய உயர்வு - அறிக்கையளிக்க உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2019

வட்டார கல்வி அலுவலர் ஊதிய உயர்வு - அறிக்கையளிக்க உத்தரவு!


தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், கல்வித்துறை நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டன.

உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டன. இதில், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு சமமான பணியிடமாக, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் கருதப்பட்டது. தற்போது, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,பதவி உயர்வு பெறும் வகையில், வட்டார கல்வி அலுவலர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது.

அதற்கேற்ப,ஊதிய விகிதம் மாற்றப்பட்டுள்ளது. இதை அமல்படுத்த, தற்போது பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்கள், தங்கள் பணிக்காலம், பதவி உயர்வு, சம்பள விகிதம் உள்ளிட்ட விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி