த/பெ: ரெத்தினம்,
3/465,மெயின் ராேடு,
ராமசாமிகட்டளை,நரசிம்மபுரம்,
புள்ளபூதங்குடி(அஞ்சல்),
பாபநாசம்(வட்டம்),
தஞ்சாவூர்(மாவட்டம்)
அ.கு.எண்:612301.
பெறுதல்:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம்,
சென்னை.
ஐயா,
பொருள்: பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் T.T.C( விவசாயம்) Technical Teacher Certificate(தொழிலாசிரியர் பயிற்ச்சி) படித்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டுதல் தொடர்பாக.
தற்பொழுது பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் T.T.Cஓவியம்,T.T.Cஇசை,T.T.Cதை
"1.பார்வையில் கானும் கடிதங்களின் மீது தங்களின் கனிவான கவனம் ஈர்க்கப்படுகிறது. 2.கல்வி உரிமைச்சட்டம்(RTE Act) நிர்ணயித்துள்ள நெறிமுறைகளுக்கேற்ப நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலைக்கல்வி(Work Education) பகுதிநேர ஆசிரியர் பணியிட தேவை 5904 என நிர்ணயிக்கப்பட்டு அணைவருக்கும் கல்வி திட்டத்தின்(SSA)கீழ் பணியிடம் மற்றும் அதற்கான நிதி(ரூ.17.71கோடி) 2011-12 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் (Annual Work Plan &Budget) ஒதுகக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான வேளாண்மை,நெசவு மற்றும் மரவேலை தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேவை இல்லை எனக் கருதலாம்."தற்போது தொழிற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்காக காத்திருப்போர் மேற்சொன்ன பகுதிநேர பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது". 3.மேற்கண்ட நிலையில் கைத்தொழில் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின்படி பகுதிநேர "தோட்டக்கலை" ஆசிரியர் நியமனத்திற்கு T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் ஆனால் திட்ட இயக்குனர் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு வேளாண்மைத்துறைக்கு வேலைவாய்ப்புக்கு செல்லக்கூடடிய Diplomo agri, B.sc agri, M.sc agri படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க கல்வித்தகுதி நிர்ணயித்துள்ளார்கள்.பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் சில மாவட்டங்களில் மட்டும் மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி உடையவர்களைக் கொண்டு நியமனம் செய்தும் பலமாவட்டங்களில் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது 1992 முதல் T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணி நியமனத்தடை இருந்துவரும் நிலையில்
2000 ல் பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலைப் பள்ளிகளில்(+1,+2) விவசாயப் பாடத்தை நடத்துவதற்கு T.T.C விவசாயம் படித்தவர்களை தற்காலிகமாக நியமனம் செய்துள்ளார்கள்.T.T.C விவசாயம் படித்தவர்கள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) மட்டுமே பாடம் நடத்த தகுதியுடையவர்கள்.தற்பொழுது மேல்நிலை பள்ளிகளில் தற்காலிகமாக விவசாயப்பாடம் நடத்தும் T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு "மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்" மூலம் சிறப்பு பயிற்சி வழங்கி முழுநேர விவசாய ஆசிரியர்களாக மாற்ற பயிற்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது T.T.C பயிற்ச்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் T.T.C பயிற்ச்சி கொடுப்பதற்க்கு முயற்ச்சிகள் நடந்து வருகிறது.சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு T.T.C விவசாய பணியிடத்தை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறாக T.T.C விவசாயம் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து தோட்டக்கலை ஆசிரியர் (விவசாய கைத்தொழில் ஆசிரியர்)பணிக்கு காத்திருக்கும்போது தவறான முறையில் பணியில் சேர்ந்தவர்களை காப்பாற்றும் முயற்சி நடைபெறுகிறது RMSA திட்டத்தில் விவசாயம் ஒரு பாடமாக மாதிரிப்பள்ளிகளில் இடம்பெற்றறுள்ளது .9மற்றும்10ஆம் வகுப்பு T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்காமல் B.sc agri படத்தவர்களை தனியார் துறை மூலம் நியமனம் செய்துள்ளார்கள். எனவே பள்ளிகளில் விவசாயம் ஒரு பாடமாக வந்துகொண்டு இருப்பதால்(6-8தோட்டக்கலை,9&
வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.கோவை வேளாண்மை பல்களைக்கழகம் மூலம் வேளாண்பாடத்திட்ட கையேடு (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை)என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு 100 அரசு பள்ளிகளுக்கு மட்டும் புத்தகம் அனுப்பப்பட்டு T.T.C விவசாயம் கைத்தொழில் ஆசிரியர் (தோட்டக்கலை) பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.எனவே மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்தபட்சம் கிராமபுர பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி வேளாண்பாடத்திட்ட கையேடு (6ஆம்
வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) என்ற புத்தகத்தை அச்சிட்டு அறிமுகம் செய்து அதில் T.T.C விவசாயம் படித்தவர்களை விவசாய கைத்தொழில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டுகிறோம்.
இடம்:இராமசாமிகட்டளை தேதி:14/10/2019 இப்படிக்கு
T.T.Cவிவசாயம்
படித்தவர்கள்
சார்பாக
Yes
ReplyDelete