தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைக்கு தனி தொட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2019

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைக்கு தனி தொட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சாதாரண குப்பை தொட்டிகளுடன், மக்கா கழிவு பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு தனித்தனியாக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது அனைத்து கழிவுகளையும் சேகரித்து மொத்தமாக கழிவுகள் சேகரிக்க வரும் ஊழியர்களிடம் வழங்குகின்றனர். அதோடு இப்போது பள்ளிகளில் துப்புரவு பணியாளர்  நியமனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் பல்வேறு வகைகளில் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கழிவுகளை தற்போது தனியாக அகற்றாமல் மற்ற பேப்பர் உட்பட மக்கும் தன்மையுள்ள கழிவுகளுடன் சேர்த்தே  சேகரிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி, பள்ளிகளில் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தனித்தனியாக சேகரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில் அனைத்துப்பள்ளிகளிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு தனித்தனி குப்பை தொட்டிகளை வைத்து பராமரிக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி