தொடக்கப் பள்ளிகளில், கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2019

தொடக்கப் பள்ளிகளில், கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குநர் உத்தரவு!


ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும்.ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடு களை ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இதை அறிக்கையாக தயாரித்து, மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அக்டோபருக்கான பள்ளி பார்வை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வரும் காலங்களில், ஆசிரியர் பயிற்றுனர்களின் ஆய்வு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நான்கு கல்வி மாவட்டங்களிலும், சுழற்சி அடிப்படையில், பள்ளிகளில் ஆய்வு பணிகள் நடக்கின்றன.

சேர்க்கை குறைந்த பள்ளிகள், தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள் மீது, கவனம் செலுத்தப் படுகிறது. இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதால், சிறப்பு திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி