அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட அதிகாரிகளுக்கு உத்தரவு


அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும், அங்கீகாரம் இல்லாத நர்சரி பள்ளிகளை இழுத்து மூட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், தொடக்க கல்வி இயக்குனரகம், பள்ளி கல்வி இயக்குனரகம், மெட்ரிக் இயக்குனரகம் மற்றும் பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.அவற்றின் சார்பில், பள்ளிகள் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களுக்கு, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.அதேபோல, மெட்ரிக் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம்; நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம்; அரசு உதவி பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகமும் அனுமதி வழங்குகின்றன.

இதில், மாவட்ட வாரியாக அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது. அதில்,அங்கீகாரம் இல்லாமல், நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள், அதிகம் செயல்படுவது கண்டறியப் பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அந்த உத்தரவில், 'அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு விஜயம் செய்து, அங்கீகாரம் குறித்த ஆவணங்களை, ஆய்வு செய்ய வேண்டும்.அங்கீகாரம் இன்றி செயல்படும், அனைத்து நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளையும், தாமதமின்றி இழுத்து மூட வேண்டும். அவற்றின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

2 comments:

  1. Good dicision but itha viraivil seithal nallathu ena makkal school athaigamana money pay panranga

    ReplyDelete
  2. Full ah praivate schools i eluthu mudunga pa.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி