அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்புக: மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2019

அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு பணியாளர் பணியிடங்களை நிரப்புக: மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமூக நலத்துறை ஆணையர் ஆப்ரகாம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவிகித சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளும் மேலாக சமையலராக பணியாற்றி வருவோருக்கு பதவி உயர்வு வழங்கி சத்துணவு அமைப்பாளராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பதிவு உயர்வு வழங்கும் போது காலியாக இருக்கும் சமையலர் அல்லது உதவி சமையலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே வேளையில் முந்தைய அரசாணைகளை பின்பற்றி உரிய கல்வி தகுதியை சரிபார்த்த பின்னரே நேரடி நியமனம் செய்ய வேண்டும் எனவும் சமூக நலத்துறை ஆணையர் ஆப்ரகாம் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த பணி நியமன நடவடிக்கைகளை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் முடித்து அதற்கான அறிக்கையை டிசம்பர் 10ம் தேதிக்குள் சமூக நலத்துறை ஆணையத்திற்கு அனுப்பவும் ஆணையிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி