ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: மாநில மொழிகள் புறக்கணிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2019

ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: மாநில மொழிகள் புறக்கணிப்பு!


ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி:
மாநில மொழிகள் புறக்கணிப்பு!

வைகோ கண்டனம்

புதுடெல்லியில், ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு 2020 ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டை பள்ளி தலைமைக்கான தேசிய மையம் நடத்துகிறது. மாநாடு தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், நவம்பர் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “டெல்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த மாநாட்டில் கல்வியாளர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் தலைமைப் பண்பு சிறப்பு குறித்த அறிக்கை அல்லது காணொளியை இந்தி அல்லது ஆங்கில மொழியில் அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு, 2014 ஆம் ஆண்டில் பள்ளி தலைமைக்கான தேசிய மையம் தொடங்கிய பின்னர் நடைபெற்ற இதுபோன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்களில் இந்தி, ஆங்கிலம் மொழி ஆளுமை மிக்கவர்கள் மட்டுமே தலைமைத் திறன் மேம்பாடு பயிற்சி பெற முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வரையறுத்து இருப்பதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதனை இறுதி செய்வதற்குள் ஒவ்வொன்றாக செயல்படுத்த பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமே தவிர, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியை வலிந்து திணிப்பது ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் டில்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்கள் தலைமைப் பண்பு மேம்பாடு மாநாடு மற்றும் பயிலரங்கில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆளுமைமிக்க  ஆசிரியர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
07.11.2019

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி