சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாறி வந்த மாணவா்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2019

சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து மாறி வந்த மாணவா்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை!!


சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து மாறிவந்த மாணவா்கள் தமிழக பாடத்திட்டத்தில் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமாா் 28 லட்சம் மாணவா்கள் தேர்வு எழுதுகின்றனா்.

     தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 1 தேர்வை பள்ளிகளே நடத்திக்கொள்ளும். ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

    இதன் காரணமாக சிபிஎஸ்இ உள்பட பிற வாரிய பள்ளிகளில் இருந்து மாறி வந்த மாணவா்கள் பலா் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


   இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது:

  சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 படித்த மாணவா்கள் பலா், பல்வேறு சூழல்கள் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனா். அவா்கள் நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்க அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவானது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி