மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில விவகாரம் தொடர்பான தீர்ப்பு சன்றுமுன் உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு வெளியிட்டது.
* அதில், சன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வக்பு போர்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி என தீர்ப்பில் வாசிப்பு.
* நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை - தலைமை நீதிபதி
* பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை, அந்த இடத்தில் முன்பே கட்டடம் ஒன்று இருந்தது - நீதிபதி ரஞ்சன் கோகாய்
* நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்துவிட முடியாது - நீதிபதி ரஞ்சன் கோகாய்
* ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது - தலைமை நீதிபதி
* அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புவதை மறுக்க இயலாது - தலைமை நீதிபதி
* பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல - நீதிபதி ரஞ்சன் கோகாய்
* நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது - தலைமை நீதிபதி
* 1857 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உட்பகுதியில் வழிபட தடையில்லை - நீதிபதி ரஞ்சன் கோகாய்
* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை - நீதிபதி ரஞ்சன் கோகாய்
* இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
* வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க மத்திய, உ.பி மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
* அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் - உச்சநீதிமன்றம்
* சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
மேலும், தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது...
We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569