NMMS மாணவர்களுக்கான குறிப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2019

NMMS மாணவர்களுக்கான குறிப்புகள்

🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கலாம். காலை 8.30 - 9.00

🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல்

🔹 9.25- 11.00 : MAT

11.00 - 11. 25
இடைவேளை

11. 25 - 1.00 : SAT

🔸 தேர்வு முடிந்தவுடன் *கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின்* - இரு வினாத்தாள்களை எடுத்து கொண்டு வெளியே வரலாம்.

🔹 முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள்  விடை பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். அதன் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும்

🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்படுள்ளது. செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல், அறை கண்காணிப்பாளர் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.

🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளை தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.

🔸 *OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.*

🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம்.
அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.

🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.

🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.

🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.


*சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள்*

வாழ்த்துகளுடன் பிரதீப் ப .ஆ .

1 comment:

  1. 5 மற்றும் 8 ம் வகுப்புக்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் மிகவும் அவசியம். கல்வித்துறை வெளியிட்டால் நலமாயிருக்கும்

    வேதநாயகம்
    No:4,வடுவாம்பாள் நகர்,வேளச்சேரி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி