School Morning Prayer Activities - 07.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2019

School Morning Prayer Activities - 07.11.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:313

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

விளக்கம்:

நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

பழமொழி

A honey tongue and a heart of gall.

 அடி நாக்கிலே நஞ்சும்  நுனி நாக்கில் தேனும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

நம்மிடம் நேர்மை, அன்பு,சுயநலமின்மை, நம்பிக்கை இவையாவும் இருப்பின்  தீமையைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் வராது.

-----விவேகானந்தர்

பொது அறிவு

1. சனி கிரகத்தின் நிறம் எது ?
 மஞ்சள்

2.பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பெருங்கடல் எது?   அட்லாண்டிக் பெருங்கடல்.

English words & meanings

* Zoogeology – study of fossil animal remains. புதையுண்ட விலங்குகள் குறித்த படிப்பு.

* Zincograph - Aristic work done on Zinc plate. துத்த நாக தட்டில் செய்ய படும் நுண் வேலை.

ஆரோக்ய வாழ்வு

பதநீரில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து தோய்ந்த வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியைத் தருகிறது.

Some important  abbreviations for students

* DC -  direct current

* DIY do-it-yourself

நீதிக்கதை

வழிபோக்கனும் வைரகல்லும்

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா? என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே! என்று திட்டினான். அதற்கு அவன், அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள் என்றான்.

இன்றைய செய்திகள்

07.11.19

*பாரீஸ் கால நிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

*அதிக கொழுப்பு, காரம், இனிப்பு, உப்பு உள்ள துரித உணவுகளை பள்ளி கேன்டீன்களில் தடை செய்ய வேண்டும் -- மத்திய அரசு ஆலோசனை.




*செங்கல்பட்டில் சா்வதேச யோகா இயற்கை மருத்துவ அறிவியல் மையம்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

*பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 42 மாணவர்களைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர், அவர்களுக்கு 1,330 திருக்குறளையும் எழுதும் தண்டனை விதித்தார்.

*சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

Today's Headlines

🌸The United States of America has officially announced to the United Nations that they were withdrawing from the Paris Climatic Change Agreement.

 🌸High-fat, sweet, salty and fast foods should be banned in school canteens - central Government is on consultation about this

 🌸 Chief minister.Mr. Palanichamy laid the foundation for International Yoga Natural Medicine Science Center at Chengalpattu.

 🌸Inspector took 42 students to police custody after a clash between them in Palayamkottai.They were asked to write 1330 Thirukural as punishment.

 🌸India's Saina Nehwal lost to Chinese shuttler  in China Open Badminton.

Prepared by
Covai women ICT_போதிமரம்

2 comments:

  1. Thank you for helping to prepare morning assembly well

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி