TNPSC - குருப் இரண்டு தேர்வுக்கு இவ்வளவு குழம்ப வேண்டிய அவசியம் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

TNPSC - குருப் இரண்டு தேர்வுக்கு இவ்வளவு குழம்ப வேண்டிய அவசியம் என்ன?


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 10.10.2019 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழ் தெரியாதவர்கள் கூட தேர்வில் வெற்றி பெறுவதால் பொது ஆங்கிலம் மற்றும் பொது தமிழ் நீக்கி முதல்நிலை தேர்வில் தமிழ் மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கபடுகிறது என்று தெரிவித்து இருந்தது.

21.10.2019 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் மொழி திறன் உள்ளவர்களாகவும் கோப்புகள் வரைவு செய்யும் திறன் உள்ளவர்களாக வேண்டும் என பல்வேறு துறை செயலாளர்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் பல நிபுணர்களை கொண்டே பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பும் சுருக்கி வரைதல் போன்ற பகுதிகளும் சேர்க்கப்பட்டன என்று தெரிவித்தது.

ஏற்கனவே வெளியிட்ட தேர்வு திட்டத்தில் மொழிபெயர்ப்பு பகுதியில் மதிப்பெண்களை சேர்ப்போம் என்றும் பின்னர் சேர்க்க மாட்டோம் என்றும் அந்தர் பல்டி அடித்தது. தேர்வர்கள் பாடத்திட்டத்தை என்னவென்று புரிந்துகொள்ளும் சமயத்தில் உடனே அடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டே வந்தது.

தற்போது கருத்துரு என்ற பெயரில் அடுத்த குழப்பம்... அனேகமாக 99% பேர் பழைய பாடத்திட்டத்தையே தொடர வேண்டும் என்று உள்ளீடு செய்வார்கள்.. அதை அப்படியே கருத்தில் கொண்டு பழைய பாடத்திட்டத்தயே நடைமுறைக்கு கொண்டு வந்தால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

தேர்வாணையம் 2013 ஆம் ஆண்டில் இருந்தே குருப் இரண்டு விவகாரத்தில் தடுமாறி வருகிறது...
2014 ல் நடந்த குருப் இரண்டு தேர்வில் மெயின்ஸ் அறிமுகம்.

Essay (Paper Format)+ 100 GK – ONLINE EXAM ( தேர்வுமுறை எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை)
2016 ல் நடந்த குருப் இரண்டு தேர்வில் மெயின் தேர்வு மீண்டும் எழுதும் முறையே அறிமுகம்.

2018 ல் நடந்த குருப் இரண்டு மெயின் தேர்வில் கேள்வித்தாளும் பதில் எழுதும் பகுதியும் ஒரே புத்தக தொகுப்பாக அறிமுகம்
தற்போது மெயின் தேர்வு முறையே மாற்றம் ...

ஆக ஒவ்வொரு குருப் இரண்டு தேர்வையும் எதையோ மாற்ற முயற்சி செய்து கொண்டே இருப்பதால் நிலையாக தேர்வர்கள் படிக்க முடியாமல் போவது மட்டும் தெளிவாகிறது ...
ஏன் இவ்வளவு தடுமாற்றம் ??? பழைய பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மீண்டும் தமிழே தெரியாதவர்கள் தேர்வு எழுத முடியும் என்ற குற்றசாட்டு என்ன ஆகும் ? துறைசார் செயலாளர்களின் பல ஆண்டு கோரிக்கை என்னவாகும்?


ஆக பல குழப்பங்களில் சிக்கி தவிக்கிறது தேர்வாணையம் ...
அரசு பணிக்கு என்ன தகுதி தேவையோ அதை சரியாக மதிப்பீடு செய்து தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வை நடத்தினாலே போதுமே ... ஆணையத்தின் நோக்கம் நிறைவேறும்.

குழப்பம் நீங்கி விரைவில் தெளிவான அறிவிக்கை வெளியிட்டால் சரி.

1 comment:

  1. வணக்கம்
    குறைந்த கட்டணத்தில் FY
    2019-2020 E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

    1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 100 மட்டும்.
    2.IT RETURN - Rs 200/Person
    3. Form 10E
    4.Income Tax Notice - Ratification

    **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

    தொடர்புக்கு
    6383466805
    9677103843

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி