ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.


ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணியாற்றவுள்ள நீங்கள் இத்தேர்தல்களில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும் , அப்பணிகளில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் இக்கையேடு பெரிதும் உதவும் . உங்கள் பணி சிறப்புடன் நடைபெற நீங்கள் 1994 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் ஆகியவற்றையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் . 

 தற்போதுள்ள சட்டவிதிமுறைகளின்படி , கீழ்க்குறிப்பிட்டுள்ள நான்கு ஊராட்சித் தேர்தல்களிலும் மக்கள் நேரடியாக வாக்குப்பதிவில் பங்கு கொண்டு அப்பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பர் . 

1 ) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 

2 ) கிராம ஊராட்சி தலைவர் 

3 ) ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 

4 ) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 

 ஊராட்சித் தேர்தல்களில் மேற்கண்ட நான்கு பதவியிடங்களுக்கு ஒரே வேளையில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் , உங்கள் பணியில் அதிக பொறுப்பு உள்ளது . எனவே , கூடுதல் கவனம் தேவை . நீங்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு , தேர்தல் நடைமுறைகளில் முன் அனுபவம் இருந்தாலும் ஊராட்சித் தேர்தல் விதிகளை நுணுக்கமாகத் தெரிந்துகொண்டு செம்மையான முறையில் செயல்பட வேண்டியது அவசியம் .

Local body Election - Presiding Officer Hand book 2019 pdf - Download here

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி