வாக்குப்பெட்டியினை தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு கையால்வது? How to Handle Ballot box? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2019

வாக்குப்பெட்டியினை தேர்தலின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் எவ்வாறு கையால்வது? How to Handle Ballot box?


வாக்குப்பெட்டிகள் இயக்குவதற்கான அறிவுரைகள் :


படம் 1 வாக்குப்பெட்டி வாக்கு இடப்படுவதற்குரிய நிலையில் இருப்பதைக் காட்டுகிறது . பெட்டியின் பல்வேறு பகுதிகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இப்படத்தைக் கூர்ந்து நோக்கவும் . இந்நிலையில் வாக்குச்சீட்டுகளை நுழைப்பதற்கான நுழைவாய் திறந்து இருப்பதைக் கவனிக்கவும் .

பெட்டியைத் திறப்பதற்கு :

1 . சன்னல் மூடியைப் பொத்தானுடன் பிணைத்துக் கட்டியுள்ள கம்பியைக் கழற்றிவிட வேண்டும் .

2 . படம் 2 இல் உள்ளவாறு சன்னல் முற்றிலும் திறந்து இருக்கும் பொருட்டு சன்னல் மூடியை வலப்புறமாக திருப்ப வேண்டும் .

3 . உங்கள் கையைத் திறந்தவாறு வைத்துக் கொண்டு சன்னலின் வழியே ஒரு விரலை உள்ளே நுழைத்து மூடியின் அடியில் நடுப்பகுதி வரை நீட்டி , பிறையத்தைத் தொட வேண்டும் . ( இப்பிறையத்தைப் படம் 4 இல் காணலாம் ) .

4 . பிறயத்தைச் சன்னலை நோக்கி இழுத்து படம் 3 இல் உள்ளவாறு பொத்தானை அது கால் பகுதிக்கும் குறைவாகத் திரும்பியபின் நின்று விடும்வரை இடது புறமாக மெதுவாக திருப்ப வேண்டும் . இப்போது பெட்டியின் பூட்டு திறந்துக் கொள்வதால் அதன் உட்பகுதி தெரியுமாறு மூடியைத் திறக்கலாம் ( படம் 4 ஐக் காண்க ) .

5 . பெட்டியின் இயக்க நிலையைக் குலைத்து விடாமல் அதனை பார்வையிடுவதற்கு வேட்பாளர்களை அல்லது அவர் தம் முகவர்களை அனுமதிக்க வேண்டும் .

6 . பின்னர் முகவரிச்சீட்டு ( Address tag ) ஒன்றினை பூர்த்தி செய்து பெட்டியினுள் வையுங்கள் , மற்றும் விவரச்சீட்டு ( Lable ) பூர்த்தி செய்து உட்புறம் ஒட்டி வையுங்கள் .

மேலும் முழுமையான தகவலுக்கு ...

How to handle ballot box? Instructions - Download here

1 comment:

  1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி