அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, உதவிகளை செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பதிவு செய்த மாணவர்களின் விபரங்களையும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வாரியாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி