அதிக சம்பளம் தரும் இந்திய நகரங்களின் பட்டியலில் பெங்களூருவுக்கு முதலிடம்!
ஐடி துறையின் வளர்ச்சியினாலேயே இத்தைகைய அதிக சம்பளம் பெங்களூருவில் கொடுக்கப்படுகிறதாம். நாட்டிலேயே அதிக சம்பளம் வழங்கும் துறையாக ஐடி துறை உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ராண்ட்சடட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட் அறிக்கையின் அடிப்படையில் பெங்களூருவில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம்.
இதேபோல், நடுத்தர ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சம் ரூபாய் ஆகவும் சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 35.45 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம். இந்த ஊதிய பட்டியல் அறிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பெங்களூரு நகரம் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் 5 லட்சம் ரூபாய் ஆகவும் மும்பை நகரின் அதே ஊழியருக்கு 4.59 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற டிஜிட்டல் திறன்கள் கொண்டோருக்கான பணி வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இத்திறன்கள் கொண்டோருக்கே அதிக சம்பளமும் ஐடி துறையில் வழங்கப்படுகிறதாம். ஐடி துறைக்கு அடுத்து ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டன்ட் சேவை தருவோர், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான ஊதியம் அதிகம் உள்ளதாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி