DEE - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2019

DEE - இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் இணை சீருடைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


2019 - 20ம் கல்வியாண்டின் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள பாடநூல் விநியோக மையங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது .

பாடநுால் விநியோக மையங்கலிருந்து பள்ளி திறப்பதற்கு முன்பே பாடநூல்கள் எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கி ஒப்புதல் பெற வேண்டும் . மேலும் இரண்டாம் பருவத்தேர்வு / அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்குரிய பாடநூல்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படவேண்டும் .

பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து மாணாக்கர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்ட விவரத்தினை வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று தொகுத்து அறிக்கையாக ஜனவரி முதல் வாரத்தில் இவ்வியக்கத்திற்கு அனுப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

மேலும் இப்பொருள் சார்ந்து எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி