Online Submission of Application Form for NEET (UG) - 2020 will be available from 04:00 pm on 02.12.2019.!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

Online Submission of Application Form for NEET (UG) - 2020 will be available from 04:00 pm on 02.12.2019.!!


எய்ம்ஸ், ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், ஏ.எஃப்.எம்.சி, இ.எஸ்.ஐ.சி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி என்பது அவசியம். 

வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றிதழ் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்த இந்தியர்கள் அனைவரும் நீட் 2020 தேர்வு எழுத தகுதியுடையவர்கள்.

2020ஆம் ஆண்டு டிசம்பவர் 31 க்கு முன்னதாக அவர்களின் வயது 17 ல் இருந்து 25 க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலத்துடன் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தை பயின்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது நீட் 2020க்கான பதிவு இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் தொடங்கும். இதுகுறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளமான  ntaneet.nic.in -ல் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி, முக்கியமான தேதிகள், வயது வரம்பு விதிகள் மற்றும் பிற மாற்றங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

நீட் நுழைவுத்தேர்வுக்கு

www.nta.ac.in/

ntaneet.nic.in/

 என்ற இணையதளங்களில் 
டிசம்பர் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே 3ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500, 
ஒபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ. 1,400 விண்ணப்பக்கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்துடன் ஜி.எஸ்.டி சேவை கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி