சென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2020

சென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்


*.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு, நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, வேலை வாய்ப்பு வெள்ளியாக அனுசரிக் கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை யில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

*.இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெறுகின்றனர்.

*.சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங் களும் இணைந்து வரும் 24-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

*.சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 24-ம் தேதி காலை 10 முதல் பகல் 2 மணி வரை முகாம் நடக்கிறது.

*.இதில், 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதி யுடையஅனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.

*.இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

*.இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறைநிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறு வனத்துக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

*.வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி