5,8 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2020

5,8 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , பார்வையில் காணும் கடிதங்களில் தெரிவித்தவாறு . ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தங்கள் மாவட்டத்திலுள்ள Cluster Resource Centre ( CRC ) ஆக செயல்படும் பள்ளிகள் . அப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட ( பள்ளி எண் | UDISE CODE ) பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை , 11 . 01 . 2020 முதல் 25 . 01 . 2020 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவேற்றம் செய்யவும்.மேலும் இணைக்கப்படாத அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சம்பந்தப்பட்ட CRC மையத்தில் இணைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேற்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வினாத்தாட்கள் அச்சிட்டு வழங்கப்படுமாதலால் , தமிழ்நாடு பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .மேலும் இத்துடன் இணைப்பில் கண்டுள்ள சான்றிதழினை கையொப்பமிட்டு , ஸ்கேன் செய்து அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இவ்வலுவலக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்வது குறித்து சந்தேகங்கள் எழும் பட்சத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


1 comment:

  1. Sir please upload the main page of answer sheet of classes 5th and 8th std public examination.

    Or pls request to publish from DGE

    thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி