நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2020

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிப்பு!


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு 2020 மே 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்தல் டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. www.ntaneet.nic.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தல் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம், விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்பு களுக்கு 2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கும் காலம் ஜன.6 வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. நேற்று நள்ளிரவு 11.50 மணி யுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது.

தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் இன்று நள்ளிரவு 11.50 மணியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர் வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை ஜன.6 வரை நீட்டித்ததோடு தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜன.7 என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி