சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடக்க இருக்கிறது.
மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் 2020 ஜனவரி 1ம் தேதி யுடன் முடிந்த காலத்தில் 75 சதவீத பள்ளி வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். குறைவான அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
குறைந்தபட்ச வருகைப்பதிவு பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்படும். குறைந்த அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களை ஜனவரி 7ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு வருகைப் பதிவுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் ஏற்கப்படமாட்டாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி