ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2020

ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள்


மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஆங்கில வழி கல்வி மோகம் அதிகரித்து வரும் நிலையில், ஆங்கில வழி வகுப்புகளை அதிகரிக்கவும், ஆங்கில பயிற்சிகளை வழங்கவும், தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆங்கில திறன் வளர்ப்பு வகுப்புகளை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த வகுப்புகளை திட்டமிட்டு, ஆசிரியர்களை பெருமளவில் பங்கேற்க செய்யுமாறு, கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி