ஆன் - லைன் ( Online ) மூலம் விண்ண ப்பங்களை வரவேற்றல் ஏப்ரல் 2020 - ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01 . 01 . 2020 அன்று 12 1 / 2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27 . 01 . 2020 முதல் 31 . 01 . 2020 வரை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு ( Nodal Centre ) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் .
மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் தேர்வர் வசிக்கும் இருப்பிடத்திற்குட்பட்ட கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் மட்டுமே சென்று ( Nodal Centre ) விண்ண ப்பங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . விண்ணப்பிக்கச் செல்லும் போது விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகலினை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் . தனித்தேர்வர்கள் Nodal centre - க்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தினை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் . Nodal centre - ல் பொருத்தப்பட்டுள்ள கணினி புகைப்படக் கருவிகள் ( Web Camera ) மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் , அம்மையங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் , அங்கேயே தேர்வுக்கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது . Online மூலம் விண்ண ப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் . தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும் .
ESLC - Time Table And Online Application Details ( pdf ) - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி