ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவுகளை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், கவுரவ் கோச்சார் என்ற மாணவர், மாநில அளவில், முதலாம் இடம் பிடித்துள்ளார்.ஐ.ஐ.டி., போன்ற தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு, ஜனவரி, 6 முதல், 9 வரை, இந்த தேர்வு, 'ஆன்லைன்' வழியே, 570 மையங்களில் நடத்தப்பட்டது.தேர்வு முடிவுகளை, நேற்று முன்தினம் இரவில், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., வெளியிட்டது.
மொத்தம், ஒன்பதுலட்சம் பேர் எழுதிய தேர்வில், ஒன்பது மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தானில், தலா, இரண்டு மாணவர்களும், புதுடில்லி, குஜராத், ஹரியானாவில் தலா, ஒருமாணவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகத்தில், கவுரவ் கோச்சார் என்ற மாணவர், 99.99 சதவீதம் மதிப்பெண் பெற்று, மாநில அளவில், முதலிடம் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி