TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2020

TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் ( காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்கள் ) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ( Office Assistant ) மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு இந்தியக் குடியுரிமையுடைய , கீழ்க்காணும் பதவிகளுக்கு தகுதிபெற்ற விண்ண ப்பதாரர்களிடமிருந்து 10 . 01 . 2020 முதல் 07 . 02 . 2020 பிற்பகல் 5 . 45 மணி வரை விண்ண ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

குறிப்பு :
 1 ) மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உத்தேசமானது மற்றும் மாறுதலுக்கு உட்பட்டது .
2 ) நியமனத்தின்போது பெண் விண்ணப்பதாரர்கள் போதுமான அளவு இல்லாத நேர்வில் பெண்களுக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை , தகுதி வாய்ந்த அதே வகுப்பைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும் .
3 ) ஆதரவற்ற விதவைகள் , மாற்றுத் திறனாளிகள் ( கண் பார்வையற்றோர் தவிர ) மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இந்த நியமனத்தின்போதும் பின்பற்றப்படும் .
4 ) மேற்படி சம்பள விகிதம் மற்றும் இதரப் படிகள் மேற்குறிப்பிட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர் பணிநிலை குறித்த சிறப்புத் துணைவிதிகளுக்குட்பட்டு அமையும் .
5 ) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத் துணைவிதிகளுக்குட்பட்டு பணிபுரிய வேண்டும் .
( 6 ) 1 . காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ,
II . கடன் சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு வகையான சங்கத்தில் உள்ள ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் .

2 comments:

  1. Thank you and I have a 2.50 years experience pvt ltd bank, I want this job..

    ReplyDelete
  2. Pls tell anyone age and qualifications

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி