பிளஸ் 2 தேர்வில் குளறுபடி கேள்வி: மாணவர்கள் தவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2020

பிளஸ் 2 தேர்வில் குளறுபடி கேள்வி: மாணவர்கள் தவிப்பு!


மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 வரலாற்று தேர்வில், இந்திய தேர்தல் ஆணையர் யார் என்ற கேள்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய விடைகள் தவறாக தரப்பட்டன.

மதுரை மாவட்ட அளவில் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு பாட இரண்டாம் திருப்புதல் தேர்வு நேற்று நடந்தது.இதில் 20வது கேள்வியாக ‛இந்தியாவின் தற்போதைய தேர்தல் ஆணையர் யார்' என கேட்கப்பட்டிருந்தது. அதில் 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

விடைகளாக 1.அமித்ஷா, 2.எடப்பாடி பழனிச்சாமி, 3.ராம்நாத்கோவிந்த், 4.சத்யா ராக சாகு என தரப்பட்டிருந்தன. அதில் ஒன்றை மாணவன் தேர்வு செய்யவேண்டும். ஆனால் நான்கு பதில்களும் தவறானவை. தற்போதைய இந்திய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா உள்ளார்.தவறான விடைகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி